வியாசர்பாடியில் குடும்ப தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை


வியாசர்பாடியில் குடும்ப தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை
x

வியாசர்பாடியில் குடும்ப தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை

வியாசர்பாடி கே.கே.நகர் மேல்பட்டி பொன்னையம் தெருவை சேர்ந்த சுரேஷ். இவர் மினி வேன் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மலர் (வயது 26) என்ற மனைவியும், தேவா என்ற (7) மகனும் உள்ளனர். இந்த நிலையில் சுரேசுக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மலர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, வெளியில் சென்று இருந்த கணவர் சுரேஷ் வீட்டிற்கு வந்து பார்த்த போது, மனைவி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக எம்.கே.பி. நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து அறிந்த எம்.கே.பி.நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story