மின்னல் தாக்கி பெண் பலி


மின்னல் தாக்கி பெண் பலி
x

வாலாஜா பகுதியில் பலத்த மழை பெய்தபோது மின்னல்தாக்கி பெண் பலியானார்.

ராணிப்பேட்டை

வாலாஜா

வாலாஜா பகுதியில் பலத்த மழை பெய்தபோது மின்னல்தாக்கி பெண் பலியானார்.

வாலாஜாபேட்டையை அடுத்த செங்காடு மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் நெடுஞ்சாலைத் துறையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பார்வதி. இருவரும் திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் உள்ள பார்வதியி்ன் தாயார் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மோட்டார்சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்தனர்.

ஊருக்கு அருகே வரும்போது மழை அதிகமாக பெய்ததால் இருவரும் புளிய மரத்தின் அடியில் நின்றனர். அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் பார்வதி மயங்கி கீழே விழுந்துள்ளார். அவரை கணவர் கார்த்திகேயன் காப்பாற்ற செல்லும் போது அவரையும் மின்னல் தாக்கியது.

அந்த பகுதியில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் இருவரையும் மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பார்வதி சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். கார்த்திகேயன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து வாலாஜாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story