தனியார் பஸ் மோதி பெண் பலி


தனியார் பஸ் மோதி பெண் பலி
x

தனியார் பஸ் மோதி பெண் பலியானார்

திருச்சி

திருச்சி கல்லுக்குழி ெரயில்வே காலனியை சேர்ந்தவர் மஜ்ஜர் ஷெரீப். இவரது மகன் கரீம் ஷெரீப் (வயது 19). இவர் நேற்று முன்தினம் இரவு தாயார் ஷான்மா (40) என்பவருடன் திருச்சி-சென்னை பைபாஸ் ரோட்டில் இருந்து திருவானைக்காவல் சோதனைச் சாவடி ரோட்டில் மொபட்டில் வந்து கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த தனியார் பஸ் அவர்கள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ஷான்மாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் பஸ் டிரைவர் தொட்டியம் பகுதியை சேர்ந்த லோகேஸ்வரன் (30) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story