லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது


லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது
x

மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ.4,500 லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது செய்யப்பட்டார். அவருடைய வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

தஞ்சாவூர்


மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ.4,500 லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது செய்யப்பட்டார். அவருடைய வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

மின் இணைப்பு பெயர் மாற்றம்

தஞ்சை விளார் சாலையில் உள்ள நாவலர் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் மனோகரன்(வயது 39). இவருடைய மனைவியின் சகோதரி பத்மினி. இவர், தஞ்சை வசந்தபுரி நகரில் புதிதாக வீடு வாங்கி உள்ளார். அந்த வீட்டில் 3 மின் இணைப்புகள் உள்ளன.இந்த இணைப்புகளை பத்மினி தனது பெயருக்கு, பெயர் மாற்றம் செய்ய ஆன்லைன் மூலம் மின் வாரிய அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து இருந்தார்.

ரூ.4,500 லஞ்சம்

அப்போது தஞ்சை மேற்கு மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்தில் கணக்கீட்டாளராக இருந்த தேன்மொழி என்பவர் விண்ணப்பத்தை ஆய்வு செய்து ஒரு இணைப்புக்கு பெயர் மாற்றம் செய்ய ரூ.1,500 வீதம் 3 இணைப்புகளுக்கும் ரூ.4,500 லஞ்சம் கொடுக்குமாறு கேட்டுள்ளார்.ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத பத்மினி தனது சகோதரியின் கணவர் மனோகரன் மூலம் தஞ்சை மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ, இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் அடங்கிய போலீசார் மாறுவேடத்தில் மின் வாரிய அலுவலகத்திற்கு சென்று கண்காணித்தனர்.

கைது

அப்போது மனோகரன், ரசாயன பவுடர் தடவிய ரூ.4,500-ஐ தேன்மொழியிடம் கொடுத்தார். அதனை அவர் வாங்கியபோது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.இதையடுத்து இன்ஸ்பெக்டர் பத்மா விசாரணை செய்து கைது செய்யப்பட்ட தேன்மொழியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.மேலும் தஞ்சை பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள தேன்மொழியின் வீட்டிற்கும் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் சென்று சோதனை நடத்தினர்.


Next Story