சாராயம் விற்ற பெண் கைது


சாராயம் விற்ற பெண் கைது
x
தினத்தந்தி 23 Nov 2022 6:45 PM GMT (Updated: 23 Nov 2022 6:45 PM GMT)

சாராயம் விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி


சங்கராபுரம்,

சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் மூக்கனூர் கிராம பகுதியில் ரோந்துபணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள சாத்தனூர் அணை வாய்க்கால் அருகே சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த, அரசம்பட்டை சேர்ந்த லட்சுமி (வயது 65) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 5 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story