ரெயிலில் அடிபட்டு தொழிலாளி பலி


ரெயிலில் அடிபட்டு தொழிலாளி பலி
x

கொடைரோடு அருகே ரெயிலில் அடிபட்டு தொழிலாளி ஒருவர் பலியானார்.

திண்டுக்கல்

கொடைரோடு அருகே கொழிஞ்சிப்பட்டி என்னுமிடத்தில் ரெயில் தண்டவாளத்தில் சுமார் 30 வயது உடைய வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்து கொடைரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் ஏட்டு கருப்பையா மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பினர்.

விசாரணையில் ரெயிலில் அடிபட்டு இறந்தவர், கொடைரோடு அருகேயுள்ள நரியூத்து ஊராட்சி பாலம்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சதீஸ்குமார் (வயது 23) என்பது தெரியவந்தது. இது குறித்து திண்டுக்கல் ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து அவர் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது தண்டவாளத்தில் நடந்து சென்றபோது ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story