சேத்தியாத்தோப்பு அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி


சேத்தியாத்தோப்பு அருகே  மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
x

சேத்தியாத்தோப்பு அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியானாா்.

கடலூர்

சேத்தியாத்தோப்பு,

சேத்தியாத்தோப்பு அடுத்த மிராலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் விருத்தகிரி (வயது 45). முடித்திருத்தும் தொழிலாளியான இவர், சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டில் முடிதிருத்தும் கடை வைத்து நடத்தி வந்தார்.

சம்பவத்தன்று மிராலூரில் சிதம்பரம்-விருத்தாசலம் சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பால் ஏற்றி வந்த மோட்டார் சைக்கிள் அவர்மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து சேத்தியாத்தோப்பு போலீசில் அவரது தம்பி அழகிரி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story