ரெயில் மோதி தொழிலாளி சாவு


ரெயில் மோதி தொழிலாளி சாவு
x

ரெயில் மோதி தொழிலாளி சாவு

தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே உள்ள நரசிங்கம்பேட்டை மெயின் ரோட்டை சேர்ந்தவர் ரவி(வயது54). தொழிலாளி. நேற்றுமுன்தினம் அதிகாலை 3 மணி அளவில் இவர் வீட்டிற்கு அருகே உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ெரயில் ரவி மீது மோதியது. இதில் அவர் உடல் துண்டு துண்டானது. ரவியை காணாமல் தேடிய குடும்பத்தினர் ெரயில்வே தண்டவாளம் அருகே உடல் சிதறி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி திருநீலக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story