வெள்ளாற்றில் தீக்குளித்த தொழிலாளி


வெள்ளாற்றில் தீக்குளித்த தொழிலாளி
x

வெள்ளாற்றில் தொழிலாளி தீக்குளித்தார்.

பெரம்பலூர்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா புலிவலத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி(வயது 40). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி வெண்ணிலா(40) என்ற மனைவியும், சுசிலா(20), சுகன்யா(13) என 2 மகள்களும், ஜெயனீஸ்வரன்(18) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக வெண்ணிலா தனது மகன் மற்றும் மகள்களை அழைத்துக்கொண்டு பெரம்பலூர் மாவட்டம் எஸ்.ஆடுதுறையில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து தங்கியிருந்தார். இந்த நிலையில் நேற்று காலை சுப்பிரமணி சு.ஆடுதுறைக்கு வந்து வெண்ணிலாவை சந்தித்துள்ளார். அப்ேபாது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதால் சுப்பிரமணி வெள்ளாற்றுக்கு மண்எண்ணெய் கேனுடன் சென்று உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் உடல் கருகிய சுப்பிரமணியை, அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சுப்பிரமணிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மங்களமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story