மின்வேலியில் சிக்கி தொழிலாளி பலி


மின்வேலியில் சிக்கி தொழிலாளி பலி
x

ள்ளக்குறிச்சி அருகே மின்வேலியில் சிக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி அருகே தண்டலை கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 55). தொழிலாளி. இவர் தனது மனைவி மாசிலாமணியுடன் சிறுவங்கூர் கிராமத்தில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு தண்டலை கிராமத்தில் உறவினர் ஒருவரின் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வருவதாக வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்துவிட்டு சீனிவாசன் சென்றார். ஆனால் அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி அலைந்தனர். இருப்பினும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தண்டலையில் உள்ள வேதமாணிக்கம் என்பவரின் வயலில் சீனிவாசன் இறந்து கிடந்தாா். இதுகுறித்த தகவலின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் வேதமாணிக்கம் வயலில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சீனிவாசன் சிக்கி இறந்தது தெரிந்தது. இதையடுத்து சீனிவாசன் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பாிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். .இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story