கோஷ்டி மோதல் 8 பேர் மீது வழக்கு
தாரமங்கலம் அருகே கோஷ்டி மோதலில் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம்
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகே கோஷ்டி மோதலில் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தாரமங்கலம் அருேக மல்லிக்குட்டை கிராமம் மன்னாதன் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் சதிஷ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நடராஜன் என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. இதுதொடர்பாக இரு தரப்பினரும் கோஷ்டியாக மோதிக்கொண்டனர். இதுகுறித்து இரு தரப்பினரும் தனித்தனியாக போலீசில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி இரு தரப்பை சேர்ந்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தினர்.Wrestling case against 8 people
Related Tags :
Next Story