வடமதுரை அருகே ரெயில் தண்டவாளத்தில் வாலிபர் பிணம்


வடமதுரை அருகே ரெயில் தண்டவாளத்தில் வாலிபர் பிணம்
x

வடமதுரை அருகே ரெயில் தண்டவாளத்தில் வாலிபர் பிணம் கிடந்தது.

திண்டுக்கல்

வடமதுரை அருகே குளத்தூரில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் நேற்று காலை வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரது உடலில் பலத்த காயங்கள் இருந்தன.

இதனை பார்த்த பொதுமக்கள், திண்டுக்கல் ெரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், தண்டவாளத்தில் இறந்து கிடந்தவர் பாடியூர் அருகே உள்ள கூட்டாத்துப்பட்டியை சேர்ந்த கார்த்திக் கண்ணன் (வயது 21) என்பதும், இவர் குளத்தூரில் அழகுராஜா என்பவரிடம் ஆடு மேய்க்கும் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும் அவர் ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Related Tags :
Next Story