சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது


சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
x

திருமணம் செய்வதாக கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டாா்.

தஞ்சாவூர்


தஞ்சை கீழவாசல் ஆபிரகாம் பண்டிதர் சாலையை சேர்ந்த அக்பர் அலி மகன் முகமது ஆசிப் (வயது 25). இவர் கேட்டரிங் படித்துள்ளார். முகமது ஆசிப் தஞ்சை அண்ணாசாலையில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலைபார்த்த போது ஒரத்தநாட்டை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. பின்னர் திருமணம் செய்வதாக கூறி சிறுமியிடம் நெருங்கி பழகியுள்ளார். இதன் விளைவாக அந்த சிறுமி கர்ப்பமடைந்தார். இதையடுத்து முகமது ஆசிப் வெளிநாட்டிற்கு சென்று விட்டார்இந்த நிலையில் கடந்த 13- ந் தேதி தஞ்சை ராசாமிராசுதார் ஆஸ்பத்திரியில் சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து சிறுமி தஞ்சை அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்த முகமது ஆசிப்பை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.


Next Story