மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது


மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 14 Aug 2023 10:00 PM GMT (Updated: 14 Aug 2023 10:00 PM GMT)

சாணார்பட்டி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல்

சாணார்பட்டி அருகே உள்ள ஆவிளிபட்டியை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 29). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவர், அப்பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 33 வயது பெண் ஒருவரை கர்ப்பமாக்கியதாக கூறப்படுகிறது. அந்த பெண்ணின் உடலில் மாற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரது பெற்றோர், அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர். அப்போது அவர், 6 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி வழக்குப்பதிவு செய்து பிரசாந்தை கைது செய்தார். பிரசாந்துக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story