குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா நாயக்கனேரி கிராமத்தை சேர்ந்தவர் ராம்கி (வயது 28). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாராயம் விற்ற வழக்கில் வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
ராம்கி மீது சாராயம் விற்றது தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்ததால் குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி கலெக்டருக்கு, போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரை செய்தார். அதன்பேரில் ராம்கியை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
இதையடுத்து அதற்கான ஆணையில் நகலை போலீசார் அவரிடம் வழங்கினர்.
Related Tags :
Next Story