குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது


குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
x

தாழையூத்து அருகே குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே உள்ள ராஜவல்லிபுரத்தை சேர்ந்தவர் செல்லப்பா மகன் லட்சுமணன் (வயது 23). இவரை தாழையூத்து போலீசார் கொலை முயற்சி, அடிதடி மற்றும் திருட்டு வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் விஷ்ணு அதனை ஏற்று லட்சுமணனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதற்கான ஆணையை தாழையூத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வழங்கினார்.


Next Story