மின்சாரம் தாக்கி வாலிபர் பலி


மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
x

நெல்லை அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார்.

திருநெல்வேலி

நெல்லை அருகே ராமையன்பட்டியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 28). இவர் நெல்லை சந்திப்பு உடையார்பட்டி பகுதியில் ஒரு வீட்டில் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்குள்ள டியூப் லைட்டின் மீது அவரது கைப்பட்டதால் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த முத்து கிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story