பாகிஸ்தான்: பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து - 19 பேர் பலி


பாகிஸ்தான்: பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து - 19 பேர் பலி
x

கோப்புப்படம் 

கூர்மையான வளைவை நெருங்கியபோது பஸ் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்தது.

பக்துன்க்வா,

பாகிஸ்தானில் மலைபாதையில் சென்றுக் கொண்டிருந்த பயணிகள் பஸ் ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளாதில் 19 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர்.

30 பயணிகளுடன் ராவல்பிண்டியில் இருந்து குவெட்டாவுக்குச் பஸ் புறப்பட்டுள்ளது. அப்போது கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள டானிசார் அருகே கூர்மையான வளைவை நெருங்கியபோது பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்தது.

இதுவரை உயிரிழந்த 19 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. காயமடைந்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த மாதம் பலுசிஸ்தானில் மினிபஸ் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 22 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story