ஆப்கானிஸ்தானில் ஓட்டல் மீது துப்பாக்கி ஏந்திய 4 பேர் தாக்குதல்; பலர் பலி என அச்சம்
ஆப்கானிஸ்தானில் ஓட்டல் ஒன்றில் துப்பாக்கி ஏந்திய 4 பேர் நடத்திய தாக்குதலில் பலர் பலியாகியிருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. #Kabul
காபூல்,
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூல் நகரில் இன்டர்கான்டினென்டல் ஓட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஓட்டலுக்குள் துப்பாக்கிகளுடன் புகுந்த 4 பேர் துப்பாக்கி சூடு நடத்தினர்.
அவர்களை நோக்கி பாதுகாப்பு படையினரும் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் கட்டிடம் தீப்பிடித்து கொண்டது. அங்கு வசிப்போர் மற்றும் ஓட்டல் ஊழியர்கள் வேறு இடங்களுக்கு தப்பியோடினர்.
இத்தாக்குதலில் பலர் பலியாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. தாக்குதல் நடத்தியோர் சில ஓட்டல் ஊழியர்கள் மற்றும் ஓட்டலுக்கு வந்த சிலரை சிறை பிடித்து வைத்திருக்க கூடும் என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு யாரும் பொறுப்பேற்கவில்லை.
இந்த ஓட்டல் மீது கடந்த 2011ம் ஆண்டு தலீபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
#Kabul #gunmen
Related Tags :
Next Story