மும்பை தாக்குதல் பற்றி கருத்து தெரிவித்த நவாஸ்ஷெரீப் மீது தேச துரோக வழக்கு


மும்பை தாக்குதல் பற்றி கருத்து தெரிவித்த நவாஸ்ஷெரீப் மீது தேச துரோக வழக்கு
x
தினத்தந்தி 14 May 2018 10:30 PM GMT (Updated: 14 May 2018 9:34 PM GMT)

பாகிஸ்தானில் இருந்தவாறு செயல்படும் லஷ்கர் இ-தொய்பா பயங்கரவாதிகள் 2008-ம் ஆண்டு மும்பை நகருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். #Nawaz

லாகூர்,

பாகிஸ்தானில் இருந்தவாறு செயல்படும் லஷ்கர் இ-தொய்பா பயங்கரவாதிகள் 2008-ம் ஆண்டு மும்பை நகருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் சில வெளிநாட்டவர்கள் உள்பட 150-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல் குறித்து கடந்த சனிக்கிழமை கருத்து தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ்ஷெரீப், “பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்புகள் செயல்பாட்டில் இருக்கின்றன. அவர்களை அரசு சாராதவர்கள் என்று கூறலாம். அவர்கள் எல்லை தாண்டிச்சென்று, மும்பையில் தாக்குதல் நடத்தி மக்களில் 150 பேரை கொல்ல நாம் அனுமதித்து இருக்கலாமா? இதை எனக்கு விளக்குங்கள். இந்த வழக்கு விசாரணையை நம்மால் முடிக்க முடியாதா, என்ன?” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

அவருடைய இந்த கருத்து பாகிஸ்தானில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில், நவாஸ்ஷெரீப்பின் கருத்து தேசத்துக்கு துரோகம் விளைவிப்பதாக உள்ளது என்று கூறி லாகூர் ஐகோர்ட்டில் வக்கீல் அப்தாப் விர்க் நேற்று மனுதாக்கல் செய்தார். அதில், “நவாஸ்ஷெரீப்பின் கருத்து தேச பாதுகாப்புக்கும், மாநில அமைப்புகளுக்கும் எதிரானது. எனவே அவர் மீது தேசத் துரோக சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தரவிடவேண்டும்” என்று கூறப்பட்டு உள்ளது.

Next Story