25 வினாடி முன்னதாக கிளம்பி சென்ற ரயில்: பயணிகள் கோபம் மன்னிப்பு கோரிய ரயில்வே நிர்வாகம்


25 வினாடி முன்னதாக கிளம்பி சென்ற ரயில்: பயணிகள் கோபம் மன்னிப்பு கோரிய ரயில்வே நிர்வாகம்
x
தினத்தந்தி 18 May 2018 5:40 AM GMT (Updated: 18 May 2018 5:40 AM GMT)

ஜப்பானில் 25 வினாடி முன்னதாக ரயில் கிளம்பி சென்றதால் பயணிகள் கோபம் அடைந்தனர். அதற்கு ரயில்வே நிர்வாகம் மன்னிப்பு கேட்டுள்ளது.

டோக்கியோ,

ஜப்பான் நாட்டில்  நோட்டகவா என்ற ரயில் நிலையத்தில் இருந்து 7.12 மணிக்கு வழக்கம் போல் கிளம்ப வேண்டிய ரயில் 25 வினாடி முன்னதாக கிளம்பி சென்றது. 

அந்த ரயிலில் பயணம் செய்ய இருந்த பயணிகள் வழக்கமாக செல்லும் ரயில் இல்லாததை கண்டு  கோபம் அடைந்தனர். ஒரு சிலர் இது தொடர்பாக ரயில்வே நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.

பயணிகள் ரயிலை தவற விட்டதை தெரிந்த ரயில்வே நிர்வாகம்  தவறுக்கு வருந்துவதாகவும், அடுத்த முறை இது போன்ற சம்பவம் நடைபெறாது எனவும் மன்னிப்பு கோரியது.

Next Story