இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட பாதிரியார் தற்கொலை
பிரான்சில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட பாதிரியார் ஒருவர், தேவாலயத்திலேயே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்சின் ரோயன் நகரில் உள்ள கிறித்துவ தேவாலயத்தில்பாதிரியாராக இருந்தவர் ஜீன் பாப்ஸ்டிக் செபே(38). இவர், இளம்பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து ஆர்ச் பிஷ்ப்பிடம் புகார் கூறப்பட்ட நிலையில், ஜீன் பாப்ஸ்டிக் மீது விசாரணை நடைபெற்ற வந்தது. இந்நிலையில், ரோயன் நகரில் உள்ள 23வது புனித ஜீன் தேவாலயத்தில் ஜீன் தற்கொலை செய்து கொண்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த தற்கொலை தகவலை அந்நகர கிறித்துவ திருச்சபை உறுதி செய்துள்ளது. தொடர்ச்சியாக கிறித்துவ திருச்சபையைச் சேர்ந்த பாதிரியார்கள் மீது பாலியல் புகார்கள் கூறப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story