பூமியின் சுற்றுபாதையில் குப்பைகளாக குவியும் செயற்கை கோள்கள் நாசா கவலை


பூமியின் சுற்றுபாதையில் குப்பைகளாக குவியும் செயற்கை கோள்கள் நாசா கவலை
x
தினத்தந்தி 3 Oct 2018 11:47 AM GMT (Updated: 3 Oct 2018 11:47 AM GMT)

பூமியின் சுற்று வட்ட பாதையில் குப்பைகளாக குவியும் செயற்கை கோள்களால் நாசா கவலை அடைந்து உள்ளது. #NASA

வாஷிங்டன்

ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் ஒன் வெப்  உள்பட பல விண்வெளி நிறுவனங்கள் மிக அண்மைக் காலத்தில் ஆயிரக்கணக்கான செயற்கைக் கோள்களை புவியின் தாழ்வான சுற்றுவட்டப் பாதைக்கு அனுப்பப்பேவதாக சபதம் மேற்கொண்டுள்ளன. ஆனால், இது பல நெருக்கடிகளையும், ஆபத்துக்களையும் தோற்றுவிக்கும் என நாசா எச்சரிக்கின்றது.

இது தொடர்பாக நாசா தான் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையொன்றில், அனுப்பப்படும் செயற்கைகோள்கள்  தமது நடவடிக்கைகளை முடித்ததும் அதனை திரும்பபெற  வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளது.

தற்போது கிட்டத்தட்ட 4,000 செயற்கைக் கோள்கள் புவியைச் சுற்றியவண்ணமுள்ளன.இதில் வெறும் 1,800 மட்டுமே செயற்படுநிலையில் உள்ளன.

மேலதிகமாக பல நிறுவனங்கள் பூமிக்கான இணையத் தொடர்புகளை  அதிகரிக்கும் நோக்குடன் செயற்கைகோள்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

இதில் குறிப்பாக ஸ்பேஸ் எக்ஸ்  ஆனது 12,000 இணையத்தள செயற்கைகோள்களை  அனுப்ப  அனுமதி கோரியுள்ளதுடன், ஒன்வெப்  ஆனது 720  செயற்கை கோள்களுக்கு  அனுமதி பெற்றதற்கும் மேலாக 1,260 செயற்கை கோள்களுக்கு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளன.

இவையனைத்தும் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படுமாயின் அப்போது உள்ள செயற்கைக் கோள்களின் எண்ணிக்கை தற்போது உள்ளதிலும் நான்கு மடங்காக இருக்கும்.

இது பெரிய செயற்கைகோள் மோதல்களுக்குக் காரணமாகலாம் என நாசா எச்சரிக்கிறது.

நாசா இது தொடர்பாக மேற்கொண்டிருந்த ஆய்வின்  அடிப்படையில், கிட்டத்தட்ட 99 வீதமான செயற்கை கோள்கள்  அவற்றின் செயற்பாட்டுக் காலம் முடிவடைந்ததும் திரும்பப்பெறப்பட வேண்டும் என விவாதமொன்றை முன்வைத்துள்ளது.

Next Story