நைஜீரியாவில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் துப்பாக்கி சூடு; 17 பேர் பலி


நைஜீரியாவில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் துப்பாக்கி சூடு; 17 பேர் பலி
x
தினத்தந்தி 24 Dec 2018 3:24 PM GMT (Updated: 24 Dec 2018 3:24 PM GMT)

நைஜீரியாவின் வடக்கே துப்பாக்கி ஏந்திய நபர்கள் நடத்திய தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர்.

கனோ,

நைஜீரியாவின் வடக்கே மராடன் மாவட்டத்தில் மகாமி கிராமத்தில் மோட்டார் சைக்கிள்களில் வந்த துப்பாக்கி ஏந்திய சில நபர்கள் குடியிருப்புவாசிகளை நோக்கி சுட்டுள்ளனர்.

இதனை கண்ட அங்கிருந்தவர்கள் அலறி அடித்து ஓடியுள்ளனர்.  இந்த சம்பவத்தில் 17 பேர் பலியாகி உள்ளனர்.

இதுபற்றி போலீஸ் செய்தி தொடர்பு அதிகாரி முகமது சேஹு கூறும்பொழுது, இந்த கோழைத்தன செயலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என கூறினார்.

இந்த பகுதியில் சில நாட்களுக்கு முன் இதேபோன்று நடந்த தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர்.

Next Story