அமெரிக்கா: கலிபோர்னியா மாகாணத்தில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி, 4 பேர் காயம்


அமெரிக்கா: கலிபோர்னியா மாகாணத்தில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி, 4 பேர் காயம்
x
தினத்தந்தி 5 Jan 2019 1:17 PM GMT (Updated: 5 Jan 2019 1:17 PM GMT)

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியாகினர்.

லாஸ் ஏஞ்சல்ஸ், 

கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் டாரன்ஸ் பகுதியில் அமைந்துள்ள கேளிக்கை மையத்தில் இன்று திடீரென துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

மேலும், 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் பாதிக்கப்பட்ட அனைவரும் ஆண்கள் என போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச்சூடு எதனால், நடைபெற்றது என்ற விவரம் எதையும் உள்ளூர் போலீசார் உடனடியாக வெளியிடவில்லை. இருப்பினும், இரு குழுக்கள் இடையே நடைபெற்ற மோதல் என சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் தெரிவித்தனர். 

Next Story