கென்யா: விமான விபத்து - 5 பேர் பலி
கென்யாவில் சிறிய ரக விமானம் விழுந்து நொருங்கிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
நைரோபி,
கென்யாவின் வடமேற்கு பகுதியில் இன்று காலை மசாய் ஒமாரா பகுதியில் இருந்து லோட்வார் நோக்கி, ஒரு சிறிய ரக விமானம் சென்றுகொண்டிருந்தது.
கெரிசோ கவுன்டி வான் வெளியில் பறந்த போது கட்டுபாட்டை இழந்த விமானம் கீழே விழுந்து நொருங்கியது. இந்த விபத்தில் 3 அமெரிக்கர்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
விமானத்தின் எஞ்சினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கென்யாவின் வடமேற்கு பகுதியில் இன்று காலை மசாய் ஒமாரா பகுதியில் இருந்து லோட்வார் நோக்கி, ஒரு சிறிய ரக விமானம் சென்றுகொண்டிருந்தது.
கெரிசோ கவுன்டி வான் வெளியில் பறந்த போது கட்டுபாட்டை இழந்த விமானம் கீழே விழுந்து நொருங்கியது. இந்த விபத்தில் 3 அமெரிக்கர்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
விமானத்தின் எஞ்சினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story