ஆப்கானில் தவறுதலாக நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 17 போலீசார் உயிரிழப்பு


ஆப்கானில் தவறுதலாக நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 17 போலீசார் உயிரிழப்பு
x
தினத்தந்தி 17 May 2019 2:53 PM GMT (Updated: 17 May 2019 2:53 PM GMT)

ஆப்கானிஸ்தானில் தலிபானுடன் பாதுகாப்பு படையினர் போரிட்டுவரும் பகுதியில் தவறுதலாக நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 17 போலீசார் உயிரிழந்தனர்.

ஹெல்மண்ட் மாகாணத்தில் வெளிநாட்டு படைகள் தவறுதலாக நடத்திய வான்வழித் தாக்குதலில் போலீசார் 17 பேர் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர் என ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் குறித்து விசாரணை  நடத்தப்படும் என்று ஆப்கான் தெரிவித்துள்ளது. 

ஆப்கானில் பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதலை மேற்கொள்ளும் அமெரிக்க படைகள் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அமெரிக்கா தரப்பில் இவ்விவகாரம் தொடர்பாக எந்தஒரு விளக்கமும் வழங்கப்படவில்லை. ஆப்கானிஸ்தான் படைகள் எப்போது எல்லாம் உதவியை கோருகிறதோ அப்போது எல்லாம் அமெரிக்க படைகள் உதவிகளை செய்து வருகிறது. அமெரிக்க படைகளின் அத்துமீறல்தான் இது என தலிபான் பயங்கரவாத இயக்கம் தெரிவித்துள்ளது.

Next Story