ஜப்பானில் மர்ம நபர் கத்தியால் தாக்குதல்: 2 பேர் பலி, 17 பேர் காயம்


ஜப்பானில் மர்ம நபர் கத்தியால் தாக்குதல்: 2 பேர் பலி, 17 பேர் காயம்
x
தினத்தந்தி 28 May 2019 2:04 AM GMT (Updated: 28 May 2019 2:23 AM GMT)

ஜப்பானில் மர்ம நபர் கத்தியால் தாக்குதல் நடத்தியதில் 8 குழந்தைகள் உள்பட 19 பேர் காயம் அடைந்தனர்.

டோக்கியோ,

ஜப்பான் நாட்டின் கவாசாகி நகரின் நோபோரிடோ பகுதியில் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. அந்த பூங்காவில் குழந்தைகள், பெரியவர்கள் என பல்வேறு தரப்பினர் கூடியிருந்தனர். 

இந்நிலையில், அந்த பூங்காவுக்குள் நுழைந்த மர்ம நபர் திடீரென அங்கிருந்தவர்களை கத்தியால் சரமாரியாக குத்தினார். இந்த தாக்குதலில் 8 குழந்தைகள் உள்பட 19 பேர் காயம் அடைந்தனர்.  காயம் அடைந்தவர்களில் இரண்டு பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர்.

தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரித்து வருகின்றனர். 

Next Story