ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகள் நடத்திய வான்தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் பலி


ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகள் நடத்திய வான்தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் பலி
x
தினத்தந்தி 2 Oct 2019 10:15 PM GMT (Updated: 2 Oct 2019 7:51 PM GMT)

ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகள் நடத்திய வான்தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் பலியாகினர்.


* ஆப்கானிஸ்தான் உள்நாட்டுப் போர் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தலீபான் பயங்கரவாத அமைப்பின் உயர் மட்ட பிரதிநிதிகள் நேற்று பாகிஸ்தான் சென்றனர்.

* மெக்சிகோவின் வடமேற்கு மாகாணங்களை ‘நர்தா’ என்ற சக்தி வாய்ந்த புயல் சூறையாடியது. பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக நீர் நிலைகள் நிரம்பி, சாலைகளில் வெள்ளம் ஆறாக ஓடுகிறது.

* பெரு நாட்டில் அரசியல் குழப்பம் காரணமாக அந்நாட்டின் நாடாளுமன்றத்தை அதிபர் மார்டின் விஸ்காரா கலைத்தார். இந்த நிலையில், துணை ஜனாதிபதி மெர்சிடஸ் நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.

* ஆப்கானிஸ்தானின் நங்கார்ஹர் மாகாணத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து நேட்டோ படைகள் வான்தாக்குதல் நடத்தின. இதில் 5 பயங்கரவாதிகள் பலியாகினர்.


Next Story