சிலி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
சாண்டிகோ,
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சிலியின் வடக்குப்பகுதியில் உள்ள பெரு எல்லையை ஒட்டி அமைந்துள்ள பகுதியில் உணரப்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகியுள்ளது.
உள்ளூர் நேரப்படி அதிகாலை 3.46 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் பசுபிக் பெருங்கடல் கரையோரம் அமைந்துள்ள அரிகா நகரத்தை மையமாக கொண்டு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் குலுங்கியதால், அயர்ந்து தூங்கி கொண்டு இருந்த மக்கள் பீதி அடைந்தனர். பல இடங்களில் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்ததை காண முடிந்தது. நிலநடுக்கத்தால், ஏற்பட்ட சேதம் குறித்து உடனடியாக எந்த தகவலும் இல்லை.
Related Tags :
Next Story