செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய நாசா திட்டம் புதிய ரோவர் ரோபோ அனுப்புகிறது


செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய நாசா திட்டம்  புதிய ரோவர் ரோபோ அனுப்புகிறது
x
தினத்தந்தி 31 Dec 2019 12:19 PM GMT (Updated: 31 Dec 2019 12:19 PM GMT)

செவ்வாய் கிரகத்திற்கு புதிய ரோவர் ரோபோவை நாசா அனுப்ப உள்ளது. அங்கு ஆக்சிஜனை உற்பத்தி செய்ய நாசா திட்டமிட்டு உள்ளது.

வாஷிங்டன்

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதில் அடுத்த பாய்ச்சலாக ரோபோட்டிக் ரோவரை கொண்டு ஆய்வு செய்ய, 2020-ஆம் ஆண்டு களமிறங்குகின்றன வளர்ந்த நாடுகள். அதற்கான பணிகளும் மும்முரமாக நடந்து வருகின்றன.

நாசா விண்வெளி ஆய்வு மையமானது 2020 ஆம் ஆண்டில் புதிய ரோவர் ரோபோவினை அனுப்பவுள்ளது. இந்நிலையில் அந்த ரோவரின் புகைப்படத்தினை தற்போது வெளியிட்டுள்ளது நாசா. இந்த ரோவர்  செவ்வாய் கிரகத்திற்கு சென்று ஏலியன்கள் தொடர்பில் ஆய்வு செய்வதற்கு பதிலாக மனிதர்கள் வாழக்கூடிய சாத்தியம் தொடர்பில் ஆராயவுள்ளது.

அதாவது செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.
லாஸ் ஏஞ்சலிற்கு அருகிலுள்ள பசடேனா  என்ற  இடத்திலுள்ள ஜெட் உந்துவிசை  ஆய்வுகூடத்தில் குறித்த ரோவர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 23 கேமிராக்கள், 2 மைக்குகள் என்பன இணைக்கப்பட்டுள்ளன. இது அமெரிக்காவின் ஐந்தாவது ரோவர் ரோபோவாக விண்வெளிக்கு எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜுலை மாதம் விண்ணில் செலுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு காரின் ஏறக்குறைய அளவில் இருக்கும் இந்த  ரோவர் அதன்  கியூரியாசிட்டி போன்ற ஆறு சக்கரங்களைக் கொண்டுள்ளது, இது பாறை நிலப்பரப்பில் பயணிக்கும் சிறப்பு வாய்ந்தது.

உயிர்களின்  வாழ்க்கையின் தடயங்களை கண்டுபிடிப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்க, செவ்வாய் கிரகம் 2020 ஜெசெரோ என்ற நீண்ட உலர்ந்த டெல்டாவில் தரையிறங்கும்.

பல ஆண்டுகளாக விஞ்ஞான விவாதங்களுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த தளம் ஒரு காலத்தில் 500 கெஜம் ஆழமான ஏரியாக இருந்த ஒரு பள்ளமாகும்.

இந்த பள்ளம 30 மைல் (48 கி.மீ) பரந்து உள்ளது, மேலும் இது பண்டைய கரிம மூலக்கூறுகளை பாதுகாத்திருக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

செவ்வாய் கிரக வழி மண்டலத்தில் 0.13 சதவீதம் மட்டுமே ஆக்சிஜன் உள்ளது. அதே நேரத்தில் 95 சதவீதம் கார்பன்டை ஆக்சைடு மற்றும் மிக குறைந்த  அளவில் நைட்ரஜன் உள்ளிட்டவைகள் உள்ளன.

எனவே உயிரினங்கள் வாழ மிகவும் அவசியமான ஆக்சிஜனை செவ்வாய் கிரகத்தில் உருவாக்க ’நாசா’ மையம் திட்டமிட்டுள்ளது. அதற்காக அங்கு பாசி இனங்கள் அல்லது பாக்டீரியாவை அனுப்ப முடிவு செய்துள்ளது.

அமெரிக்காவின் நாசா மையம் செவ்வாய் கிரகத்துக்கு புதிதாக ஒரு விண்கலம் அனுப்புகிறது. அத்துடன் பாக்டீரியா அல்லது பாசி இனங்கள் அங்கு இவை ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story