மியான்மர் நாட்டில் கார் மீது மோதிய பஸ் பள்ளத்தாக்கில் பாய்ந்தது: 22 பேர் உயிரிழப்பு


மியான்மர் நாட்டில் கார் மீது மோதிய பஸ் பள்ளத்தாக்கில் பாய்ந்தது: 22 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 4 Jan 2020 10:15 PM GMT (Updated: 4 Jan 2020 7:02 PM GMT)

மியான்மர் நாட்டில் கார் மீது மோதிய பஸ் பள்ளத்தாக்கில் பாய்ந்து விபத்து ஏற்பட்டதில் 22 பேர் உயிரிழந்தனர்.

யாங்கூன், 

மியான்மர் நாட்டின் கெயின் மாகாணத்தில் மியாவடி- காவரக் மலைப்பாதையில் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர். அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், அந்த வழியாக வந்த கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் உருக்குலைந்து அதில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.

தொடர்ந்து தாறுமாறாக ஓடிய பஸ் மலைச்சாலையில் இருந்து விலகி பள்ளத்தாக்கில் பாய்ந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த 15 பேர் பலியான நிலையில், காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

Next Story