அமெரிக்க சலூனில் துப்பாக்கி சூடு: 5 பேர் காயம்


அமெரிக்க சலூனில் துப்பாக்கி சூடு: 5 பேர் காயம்
x
தினத்தந்தி 17 Jan 2020 11:38 PM GMT (Updated: 17 Jan 2020 11:38 PM GMT)

அமெரிக்க சலூனில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 5 பேர் காயமடைந்தனர்.

சிகாகோ,

அமெரிக்காவில் யார் வேண்டுமானாலும் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி இருப்பதால், துப்பாக்கி கலாசாரம் மேலோங்கி உள்ளது. சாதாரண துப்பாக்கிகள் தவிர, வினாடிக்கு பல தோட்டாக்களை சுடும் துப்பாக்கிகளும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக விற்கப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி போன்ற பொது இடங்களில் பலர் கொத்து கொத்தாக கொல்லப்படும் சம்பவங்கள் அங்கு அடிக்கடி அரங்கேறுகின்றன.

இந்த நிலையில் அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள ஒரு சலூனில் முடிவெட்டுவதற்காக நேற்று முன்தினம் சிலர் காத்திருந்தனர். அப்போது கடையின் ஜன்னல் வழியாக 2 பேர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இந்த திடீர் தாக்குதலில் கடையில் இருந்த 3 சிறுவர்கள் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர்.

அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும், 5 பேரின் உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை என்றும் போலீஸ் அதிகாரிகள் கூறினர். துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் காண, அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Next Story