பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 1,932 பேருக்கு கொரோனா தொற்று
பாகிஸ்தானில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 45,898 -ஆக உயர்ந்துள்ளது.
இஸ்லமாபாத்,
பாகிஸ்தானிலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,932 பேருக்கு பாகிஸ்தானில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், பாகிஸ்தானில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 45,898- ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 48 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 985 ஆக உள்ளது.
பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது. சிந்து மாகாணத்தில் மட்டும் 17,947 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப் மாகாணத்தில் 16,685 பேருக்கும், கைபர் பகதுன்க்வாவில் 6,554 பேருக்கும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 133 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story