இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.3 புள்ளிகளாக பதிவு


இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.3 புள்ளிகளாக பதிவு
x
தினத்தந்தி 23 May 2020 10:15 PM GMT (Updated: 23 May 2020 8:40 PM GMT)

இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் சவும்லாகி நகரில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.


* இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் சவும்லாகி நகரில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.3 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.

* எகிப்தின் சினாய் தீபகற்ப பகுதியில் ராணுவத்தினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 21 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.

* மெக்சிகோவின் ஜலிஸ்கோ மாகாணத்தில் உள்ள மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டியின் போது கலவரம் வெடித்தது. இதில் கைதிகள் 8 பேர் கொல்லப்பட்டனர்.

* ஆப்கானிஸ்தானின் குண்டுஸ் மாகாணத்தில் தலீபான் பயங்கரவாதிகளின் நிலைகளை குறித்து ராணுவம் நடத்திய வான் தாக்குதலில் மூத்த தலீபான் தளபதி ஒருவர் உள்பட 4 பயங்கரவாதிகள் பலியாகினர்.

Next Story