தீ விபத்திற்கு உள்ளான அமெரிக்க முதல் பெண்மணி மெலனியா டிரம்பின் சிலை


தீ விபத்திற்கு உள்ளான அமெரிக்க முதல் பெண்மணி மெலனியா டிரம்பின் சிலை
x
தினத்தந்தி 9 July 2020 6:48 AM GMT (Updated: 9 July 2020 6:48 AM GMT)

அமெரிக்க முதல் பெண்மணி மெலனியா டிரம்பின் சிலை கடந்த 4 ந்தேதி இரவு தீவிபத்திற்கு உள்ளானது.

வாஷிங்டன்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் மனைவியும் அமெரிக்க முதல் பெண்மணி மெலனியா டிரம்பின் சிலை ஒன்று  ஸ்லோவேனியாவில் உள்ள அவரது சொந்த ஊருக்கு அருகே உள்ளது. மரத்தினால் செய்யப்பட்ட அந்த சிலை கடந்த் 4 ந்தேதி இரவு தீவிபத்திற்கு உள்ளானது.

மெலனியா டிரம்பின் சிலையை நிறுவிய அமெரிக்க கலைஞரான பிராட் டவுனி, அது எரிக்கப்பட்ட பின்னர் அவர் பீடத்தில் இருந்து அதை அகற்றினார்.

இந்தச் சிலை அமெரிக்காவின் அரசியல் நிலைமை விவாதத்தை வளர்க்கும் என்று நம்பிய டவுனி, செய்த ஜனாதிபதியை மணந்து குடியேறிய ஒரு குடியேறியவராக மெலனியா டிரம்பின் நிலையை எடுத்துக்காட்டினார்.

வாஷிங்டனில் உள்ள மெலனியா டிரம்பின் அலுவலகம் இது குறித்து எந்த பதிலும் அளிக்கவில்லை.

மெலனியா ஒரு முன்னாள் மாடல் ஆவார். தொழிலதிபர் மற்றும் அமெரிக்காவின் தற்போதைய முதல் பெண்மணி, அமெரிக்காவின் 45 வது ஜனாதிபதியின் டொனால்ட் டிரம்பின் மனைவியாக உள்ளார். முதலில், மெலனியா  கட்டிடக்கலை படிக்க விரும்பினார், ஆனால் மாடலிங் தொழிலுக்கு வந்தார். ஐரோப்பாவிலும், பின்னர், நியூயார்க் நகரத்திலும் பெரும்பாலும் அச்சு வேலைகளைச் செய்வதில் வெற்றியைக் கண்டார்.அவர் 2005 இல் டொனால்ட் டிரம்பை மணந்தார்; 2006 இல் ஒரு அமெரிக்க குடிமகளானார்.


Next Story