கொரோனா தடுப்பூசி : விரைவில் சில நல்ல தகவல்கள் வெளிவரப் போகின்றன- டொனால்டு டிரம்ப்
நாங்கள் எல்லோரையும் விட அதிகமாக கொரோனா பரிசோதனை நடத்துகிறோம் என ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறினார்.
வாஷிங்டன்
அமெரிக்காவில் இதுவரை 34 லட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர், மேலும் 1,37,000 க்கும் அதிகமானோர் இந்த நோயால் இறந்துள்ளனர்.
கடந்த ஒருவாரமாக தினசரி 50 ஆயிரத்தும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறியதாவது:-
ரஷ்யா, சீனா, இந்தியா மற்றும் பிரேசில் போன்ற பெரிய நாடுகளை விட அமெரிக்காவில் உலகின் மிகப்பெரிய கொரோனா சோதனைத் திட்டம் உள்ளது. அமெரிக்கா "மிகக் குறைந்த இறப்பு விகிதத்தை மட்டுமே கொண்டுள்ளது"
வேறு எந்த நாட்டையும் விட எங்கள் சோதனை திட்டம் விரிவானவை. நாங்கள் 4.5 கோடி சோதனைகளை நடத்தி உள்ளோம்.
நாங்கள் சிறந்த தடுப்பூசிகளை உருவாக்கி வருகிறோம், நாங்கள் சிகிச்சை முறைகளை மிகச் சிறப்பாகச் செய்கிறோம். விரைவில் சில நல்ல தகவல்கள் வெளிவரப் போகின்றன என்று நான் நினைக்கிறேன்.
சீனா உலகுக்கு என்ன செய்திருக்கிறது. சீனா உலகத்திற்கு செய்த கொடுமையை மறந்துவிடக்கூடாது. கொரோனாவை சீனா பிளேக், சீனா வைரஸ் என்று அழைக்கலாம்,அதற்கு சுமார் 20 வெவ்வேறு பெயர்கள் உள்ளன.
இந்த ஆண்டு தொடக்கத்தில் கையெழுத்திடப்பட்ட சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தம் அப்படியே உள்ளது என கூறினார்.
Related Tags :
Next Story