காங்கோ நாட்டில் நெருக்கடியில் உள்ள 96 லட்சம் மக்களுக்கு ஐ.நா. மனிதநேய அமைப்பு உதவி
காங்கோ நாட்டில் நெருக்கடியில் உள்ள 96 லட்சம் மக்களுக்கு ஐ.நா. மனிதநேய அமைப்பு உதவி வழங்க உள்ளது.
நியூயார்க்,
ஜனநாயக குடியரசு காங்கோ நாட்டில் 52 லட்சம் பேர் உள்நாட்டிலேயே புலம் பெயர்ந்து உள்ளனர். அண்டை நாடுகளில் இருந்து 5.27 லட்சம் பேர் அகதிகளாக தஞ்சம் அடைந்து உள்ளனர்.
இந்த நாட்டில் உணவு பாதுகாப்பின்மை அதிகரித்து காணப்படுகிறது. ஆயுத மோதல், வன்முறை பரவல் ஒருபுறமும், பெருந்தொற்றுகள் மற்றும் இயற்கை பேரிடர் சம்பவங்கள் ஆகியவை மறுபுறமும் அந்நாட்டை நெருக்கடியில் தள்ளியுள்ளது.
இதனை முன்னிட்டு ஐ.நா. அமைப்பின் மனிதநேய விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் வெளியிட்டு உள்ள செய்தியில், ஜனநாயக குடியரசு காங்கோ நாட்டில் அழிவு நிலையில் உள்ள 96 லட்சம் மக்களுக்கு அவசர உதவி வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு தொடக்கத்தில், 1.56 கோடி மக்களுக்கு உதவி மற்றும் பாதுகாப்பு ஆகியவை தேவையாக இருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பு ஆண்டில் 1.96 கோடியாக உயர்ந்து உள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story