பிரேசிலில் புதிதாக 29,357 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 716 பேர் பலி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்

பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் குணமடைந்தோர் எண்ணிக்கை 91,39,215 ஆக உயர்ந்துள்ளது

ரியோ டி ஜெனிரோ,

உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. 

இந்நிலையில், பிரேசில் நாட்டில் கொரோனா வைரசால் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 29,357 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,01,97,531 ஆக உயர்ந்துள்ளது.

பிரேசிலில் கொரோனா வைரசால் மேலும் 716 பேர் பலியான நிலையில், உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 2,47,276 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 91,39,215 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 8,11,040 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story