கொரோனா விவகாரம்: இந்தியாவுக்கு உதவ தயார்: சீன அதிபர் ஜி ஜிங்பிங்


கொரோனா விவகாரம்: இந்தியாவுக்கு உதவ தயார்: சீன அதிபர் ஜி ஜிங்பிங்
x
தினத்தந்தி 30 April 2021 1:03 PM GMT (Updated: 30 April 2021 1:03 PM GMT)

இந்தியாவில் கொரோனா தொற்று உச்சத்தில் உள்ள நிலையில் பல்வேறு நாடுகள் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளன.

பெய்ஜிங்,

கொரோனாவுக்கு எதிராக போராடுவதில் இந்தியாவுக்கு உதவ தயாராக இருப்பதாக சீன அதிபர் ஜி ஜிங்பிங் தெரிவித்துள்ளார். சீன அரசு தொலைக்காட்சி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.  இது தொடர்பாக சீன அரசு தொலைக்காட்சியில் கூறப்பட்டு இருப்பதாவது:-  

 கொரோனா  எதிர்த்துப் போராடுவதில் இந்தியாவுடனான ஒத்துழைப்பை அதிகரிக்க சீனா தயாராக உள்ளது. இந்தியாவுக்கு ஆதரவு மற்றும் உதவிகளை வழங்க சீனா தயாராக உள்ளது என ஜி ஜிங்பிங் கூறினார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story