கொரோனா பாதிப்பு; பிரேசிலில் ஒரே நாளில் 910 பேர் உயிரிழப்பு
பிரேசிலில் கொரோனா பாதிப்புகளால் ஒரே நாளில் 910 பேர் உயிரிழந்து உள்ளனர்.
பிரேசிலியா,
தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசிலில் அதிபர் பொல்சனாரோ ஆட்சி செய்து வருகிறார். அந்நாட்டில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதேபோன்று உயிரிழப்புகளும் அதிகரித்து காணப்படுகின்றன.
உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்து அதிக உயிரிழப்புகளுடன் 2வது இடத்திலும், கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு அடுத்து 3வது இடத்திலும் உள்ளது.
இந்நிலையில், புதிய கொரோனா அலை பாதிப்புகளால் அந்நாடு மீண்டும் பாதிப்படைந்து உள்ளது. இதனால் மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிகளவில் அனுமதிக்கப்படுகின்றனர்.
பிரேசிலில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 910 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு 5,56,370 ஆக உயர்வடைந்து உள்ளது. 37,582 பேருக்கு பாதிப்புகள் ஏற்பட்டு மொத்த எண்ணிக்கை 1 கோடியே 99 லட்சத்து 17 ஆயிரத்து 855 ஆக உயர்வடைந்து உள்ளது.
Related Tags :
Next Story