காபூல் விமான நிலையத்திற்கு வெளியே குண்டுவெடிப்பு: வெள்ளை மாளிகை தகவல்
காபூல் விமான நிலையத்திற்கு வெளியே குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக, வெள்ளை மாளிகை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காபூல்,
ஆப்கானிஸ்தானின் காபூலில் ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே இன்று (வியாழக்கிழமை) ஒரு பெரிய குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
விமான நிலையத்தின் நுழைவு வாயில் ஒன்றில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இது தற்கொலைத் தாக்குதலாக இருக்கலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமான நிலையத்தை அடைவதற்காக ஆப்கானியர்கள் கூட்டம் கூட்டமாக நுழைவாயிலில் குவிந்து வருகின்றனர்.
இந்த குண்டுவெடிப்பில் பலர் காயமடைந்ததாக அதிகாரி ஒருவர் கூறினார். இந்த சம்பவத்தால் ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.
இந்நிலையில் இந்த குண்டுவெடிப்பை வெள்ளை மாளிகையின் (பென்டகன்) செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “காபூல் விமான நிலையத்திற்கு வெளியே வெடித்ததை நாங்கள் உறுதி செய்கிறோம். இந்த சம்பவத்தில் ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது குறித்து உறுதியான தகவல் எங்களிடம் இல்லை. எங்களால் முடிந்தால் கூடுதல் விவரங்களை வழங்குவோம்” என்று ஜான் கிர்பி பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story