கொரோனா பாதிப்புகள்; இலங்கையில் 10 ஆயிரம் கடந்த பலி எண்ணிக்கை


கொரோனா பாதிப்புகள்; இலங்கையில் 10 ஆயிரம் கடந்த பலி எண்ணிக்கை
x
தினத்தந்தி 6 Sep 2021 2:09 PM GMT (Updated: 6 Sep 2021 2:09 PM GMT)

இலங்கையில் கொரோனா பாதிப்புகளால் பலி எண்ணிக்கை 10 ஆயிரம் கடந்துள்ளது.


கொழும்பு,

இலங்கையில் கொரோனா பாதிப்புகள் அதிகரிப்புகளை முன்னிட்டு வருகிற 13ந்தேதி வரை நாடு முழுவதும் கொரோனா தனிமைப்படுத்துதலுக்கான ஊரடங்கு அமலில் உள்ளது.

வருகிற வாரங்களில் நிலைமை உச்சம் அடைய கூடும் என எச்சரித்துள்ள சுகாதார பணியாளர்கள், கூடியவரை வீட்டிலேயே இருக்கும்படி மக்களை வலியுறுத்தி உள்ளனர்.

இந்த நிலையில், இலங்கை சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்தியில், இலங்கையில் கடந்த 24 மணிநேரத்தில் 189 பேர் கொரோனா பாதிப்புகளுக்கு உயிரிழந்து உள்ளனர்.  இதனால், மொத்த உயிரிழப்பு 10,140 ஆக உயர்வடைந்து உள்ளது.

அந்த நாட்டில் மொத்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 4 லட்சத்து 62 ஆயிரத்த 767 ஆக உயர்வடைந்து உள்ளது.  68,070 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அமைச்சகம் தெரிவித்து உள்ளது.


Next Story