சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி
சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சான் டியேகோ,
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆராகோ நகரில் இருந்து 50 கி.மீட்டர் வடமேற்கே மையம் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால், கான்செப்சியன் நகரம் குலுங்கியது.
அங்குள்ள கட்டிடங்கள் அதிர்ந்ததால் மக்கள் பீதி அடைந்து வீடுகளை விட்டு வீதியில் தஞ்சம் அடைந்தனர். எனினும், நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்தத் தகவலும் இல்லை. உள்ளூர் நேரப்படி காலை 10.14 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயரமான கட்டிடங்கள் அதிர்ந்ததாக அங்குள்ள மக்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story