அமெரிக்காவில் விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு; 2 பேர் பலி


அமெரிக்காவில் விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு; 2 பேர் பலி
x
தினத்தந்தி 31 Oct 2021 1:33 AM GMT (Updated: 31 Oct 2021 1:33 AM GMT)

அமெரிக்காவில் விருந்து நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 2 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.


வாஷிங்டன்,

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சேக்ரமெண்டோ நகரில் நள்ளிரவில் விருந்து நிகழ்ச்சி ஒன்று நடந்து வந்தது.  இதில், நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், அதிகாலை 1 மணியளவில், விருந்து நிகழ்ச்சியில் திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது.  இந்த சம்பவத்தில் 2 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.  5 பேர் காயமடைந்து உள்ளனர்.  

இதுபற்றி தகவல் அறிந்து சென்ற அதிகாரிகள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர்.  இதுபற்றி சேக்ரமெண்டோ கவுண்டியின் ஷெரீப் உறுதிப்படுத்தி உள்ளார்.  துப்பாக்கி சூடு நடத்தியதற்கான காரணம் பற்றி உடனடி தகவல் வெளிவரவில்லை.  சந்தேகத்திற்குரிய வகையிலான விவரமும் தெரியவரவில்லை.  இந்த சம்பவம் பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story