ஆப்கானிஸ்தான்: பேருந்தில் குண்டுவெடிப்பு- 7 பேர் பலி!


ஆப்கானிஸ்தான்: பேருந்தில் குண்டுவெடிப்பு- 7 பேர் பலி!
x
தினத்தந்தி 22 Jan 2022 6:06 PM GMT (Updated: 22 Jan 2022 6:06 PM GMT)

ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகரில் மினி பேருந்தில் குண்டுவெடித்ததில் 4 பெண்கள் உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டனர்.

காபூல்,

மேற்கு ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகரில் மினி பேருந்தில் குண்டுவெடித்ததில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர். மேலும் 9 பேர் படுகாயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பேருந்தில் எரிபொருள் நிரப்பக்கூடிய பகுதியில் பொருத்தப்பட்டிருந்த ஒட்டும் வெடிகுண்டு இது என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொல்லப்பட்ட ஏழு பேரில் நான்கு பெண்களும் அடங்குவர்" என்று ஹெராட்டின் மாகாண மருத்துவமனையின் தலைவர் ஆரிப் ஜலாலி தெரிவித்தார். குண்டுவெடிப்பை ஹெராத்தின் உளவுத்துறை அலுவலகம் உறுதி செய்தது.

இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. பயணிகள் பேருந்தில் வெடிகுண்டு வெடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story