உக்ரைனுக்கு ஆதரவாக களம் இறங்கிய டென்மார்க் மக்கள்


உக்ரைனுக்கு ஆதரவாக களம் இறங்கிய டென்மார்க் மக்கள்
x
தினத்தந்தி 5 May 2022 1:14 PM GMT (Updated: 5 May 2022 1:14 PM GMT)

உக்ரைனுக்கு ஆதரவாக டென்மார்க்கில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வரவேற்றார்.

டென்மார்க்,

உக்ரைனுக்கு ஆதரவாக டென்மார்க்கில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வரவேற்றார். 

மத்திய கோபன்ஹேகன் சதுக்கத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் தீப்பந்தம் ஏந்தி உக்ரைனுக்கு ஆதரவாகக் களம் இறங்கினர். உக்ரைன் மக்களுடன் டென்மார்க் மக்கள் துணை இருப்பதை வெளிப்படுத்த "இருளில் ஒரு வெளிச்சம்" என்ற தலைப்பில் இந்நிகழ்வு நடத்தப்பட்டது. 

அவர்களை வரவேற்ற ஜெலன்ஸ்கி, "ஐரோப்பாவிற்குள் போர் மூண்டுள்ளது மிருகத்தனமானது" என்று கூறி, டென்மார்க் மக்களுக்கு தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.


Next Story