தென் ஆப்பிரிக்காவில் உள்ள மருத்துவமனையில் போலீசிடம் இருந்து துப்பாக்கியை பறித்து வெறித்தனமாக நோயாளிகளை சுட்டுக்கொன்ற நபர்!


தென் ஆப்பிரிக்காவில் உள்ள மருத்துவமனையில் போலீசிடம் இருந்து துப்பாக்கியை பறித்து வெறித்தனமாக நோயாளிகளை சுட்டுக்கொன்ற நபர்!
x
தினத்தந்தி 8 May 2022 1:59 AM GMT (Updated: 8 May 2022 1:59 AM GMT)

அந்த நபர் கண்ணிமைக்கும் நேரத்தில், போலீஸ்காரரிடம் இருந்து துப்பாக்கியைப் பிடுங்கி, வெறித்தனமாக பல தடவை சுட்டுள்ளார்.

கேப் டவுன்,

தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுனில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் 2 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.நேற்று மாலை இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

போலீசார் விசாரணையில் இருக்கும் ஒரு நபருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டதால், அந்த சந்தேக நபரை போலீசார் கேப் டவுனில் உள்ள சோமர்செட் மருத்துவமனைக்கு நேற்று அழைத்துச் சென்றனர்.

அங்கு சென்றதும், அந்த 40 வயதுடைய நபர் கண்ணிமைக்கும் நேரத்தில், ஒரு போலீஸ்காரரிடம் இருந்து துப்பாக்கியைப் பிடுங்கி, வெறித்தனமாகச் சென்று பல தடவை சுட்டுள்ளார்.

அந்த நபர் போலீஸ்காரரின் துப்பாக்கியை எடுத்து, அவரது தலையில் சுட்டதில், போலீஸ் அதிகாரி பலத்த காயமடைந்தார். மேலும், அவரால் 2 நோயாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

உடனே மற்ற போலீசார் அவரிடமிருந்து துப்பாக்கியை பறித்து அவரை வெளியே அழைத்து சென்றனர்.இதனால் மருத்துவமனை வளாகம் முழுவதும் பெரும் பதற்றம் நிலவியது.

உலகில் மிக அதிகமாக கொலை சம்பவங்கள் நடைபெறும் நாடாக தென் ஆப்பிரிக்கா  உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story