நில நடுக்க பலி எண்ணிக்கை 1,100 ஆனது ஆப்கானிஸ்தானில் மழையால் மீட்பு பணிகளில் தொய்வு


நில நடுக்க பலி எண்ணிக்கை 1,100 ஆனது  ஆப்கானிஸ்தானில் மழையால் மீட்பு பணிகளில் தொய்வு
x

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள பக்திகா மாகாணத்தில் நேற்று முன்தினம் அதிகாலை நேரத்தில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது.

காபூல்,

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள பக்திகா மாகாணத்தில் நேற்று முன்தினம் அதிகாலை நேரத்தில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இது, கோஸ்ட் நகரத்தில் இருந்து 44 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது.

ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகளாக இந்த நில நடுக்கம் பதிவானாலும், பெருத்த உயிர்ச்சேதங்களையும், பொருட்சேதங்களையும் ஏற்படுத்தி விட்டது. இந்த நில நடுக்கத்தினால் 1,000 பேர் பலியானதாகவும், 1,500 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் முதல் கட்ட தகவல்கள் வெளிவந்தன. ஆனால் இதில் 1,100 பேர் பலியாகி உள்ளதாக உள்ளூர் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. நில நடுக்கத்தினால் நவீன கான்கிரீட் கட்டிடங்கள் தப்பினாலும், ஆயிரக்கணக்கான மண்வீடுகள் தரை மட்டமாகி உள்ளன. இந்த வீடுகளின் இடிபாடுகளில் எத்தனை பேர் சிக்கி உள்ளனர் என்பதே இன்னும் தெரிய வரவில்லை. தகவல் தொடர்பு நெட்வொர்க்குகள் முடங்கி உள்ளன. அங்கு பெய்து வருகிற பலத்த மழை, மீட்பு பணிகளில் தொய்வை ஏற்படுத்தி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானில் இருந்து 8 லாரிகளில் உணவுப்பொருட்கள், அத்தியாவசியப்பொருட்கள் பக்திகா மாகாணத்துக்கு வந்துள்ளதாக தலீபான் செய்தி தொடர்பாளர் ஜபிகுல்லா முஜாகித் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ஈரான் மற்றும் கத்தார் நாடுகளில் இருந்து 2 விமானங்களில் இருந்து மனிதநேய உதவி பொருட்கள் வந்துள்ளன.

ஐ.நா.வும் உதவிக்கரம் நீட்டி உள்ளது.


Next Story