வங்காளதேச படகு விபத்து: பலி எண்ணிக்கை 49 ஆக உயர்வு


வங்காளதேச படகு விபத்து:  பலி எண்ணிக்கை 49 ஆக உயர்வு
x

இந்த விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 49- ஆக உயர்ந்துள்ளது.

டாக்கா,

வங்காளதேசத்தின் போடா, பஞ்ச்பீர், மரியா மற்றும் பங்கரி பகுதிகளைச் சேர்ந்த இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் துர்கா பூஜை விழாவில் பங்கேற்க ஆலியா காட்டில் இருந்து பாதேஷ்வர் கோவிலை நோக்கி பிரார்த்தனை செய்ய படகில் நேற்று சென்று கொண்டிருந்தனர்.அப்போது அதிக பாரம் ஏற்றிச்சென்றதால் படகு கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. அவுலியார் காட் பகுதியில் இந்த விபத்து நடந்தது. இந்த விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 49- ஆக உயர்ந்துள்ளது.


Next Story